செய்திகள் (Tamil News)
தனலட்சுமி

ராணிப்பேட்டையில் கர்ப்பிணி மர்ம மரணம்

Published On 2019-09-18 12:54 GMT   |   Update On 2019-09-18 12:54 GMT
ராணிப்பேட்டையில் கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலாஜா:

ராணிப்பேட்டை நரசிங்கபுரம் பைரவா காலனியை சேர்ந்தவர் செல்வம், கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 19). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது தனலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். செல்வத்திற்கும் தனலட்சுமிக்கும் நேற்று இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை 4 மணிக்கு செல்வம் கட்டிட வேலைக்கு சென்று விட்டார். காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் தனலட்சுமி வீட்டுக்கு சென்று பார்த்தனர். வீட்டில் மின்விசிறியில் தனலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். குழந்தை பவித்ரா அருகில் அழுதுகொண்டு நின்றிருந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

தனலட்சுமி தற்கொலை குறித்து அவருடைய கணவர் செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News