செய்திகள் (Tamil News)
கேபிபி சாமி உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மறைந்த திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை:
சென்னை திருவொற்றியூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.ஆக இருந்தவர் கே.பி.பி.சாமி.
கடந்த 5 மாதங்களாக அவருக்கு சிறுநீரக கோளாறு அதிகரித்தது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்றார். பிறகு திருவொற்றியூர் தேவி குப்பத்தில் உள்ள தன் வீட்டில் இருந்தபடி மருந்து சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இன்று காலை 6 மணிக்கு அவர் உடல்நிலை மோசமானது. அவருக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால் அதில் பலன் ஏற்படாமல் 6.10 மணிக்கு அவர் வீட்டிலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 57.
கே.பி.பி.சாமி உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். கே.பி.பி.சாமி குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
துரைமுருகன், கே.என். நேரு, எ.வ.வேலு, ரங்கநாதன், சேகர்பாபு, கு.க.செல்வம், டி.கே.எஸ்.இளங்கோவன், கலாநிதி எம்.பி., பூச்சி முருகன், மாவட்ட செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி வேணு, மாதவரம் சுதர்சனம், முன்னாள் எம்.எல்.ஏ. மதிவாணன், வி.பி.துரைசாமி, பாலம் இருளப்பன், தி.மு.தனியரசு, புழல் நாராயணன், மருது கணேஷ், ஆசைதம்பி, குறிஞ்சி கணேசன், ஏ.வி.ஆறுமுகம், இளையஅருணா, தனரமேஷ் மற்றும் ஏராளமான தி.மு.க.வினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை திருவொற்றியூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.ஆக இருந்தவர் கே.பி.பி.சாமி.
இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 5 மாதங்களாக அவருக்கு சிறுநீரக கோளாறு அதிகரித்தது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்றார். பிறகு திருவொற்றியூர் தேவி குப்பத்தில் உள்ள தன் வீட்டில் இருந்தபடி மருந்து சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இன்று காலை 6 மணிக்கு அவர் உடல்நிலை மோசமானது. அவருக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால் அதில் பலன் ஏற்படாமல் 6.10 மணிக்கு அவர் வீட்டிலேயே உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 57.
துரைமுருகன், கே.என். நேரு, எ.வ.வேலு, ரங்கநாதன், சேகர்பாபு, கு.க.செல்வம், டி.கே.எஸ்.இளங்கோவன், கலாநிதி எம்.பி., பூச்சி முருகன், மாவட்ட செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி வேணு, மாதவரம் சுதர்சனம், முன்னாள் எம்.எல்.ஏ. மதிவாணன், வி.பி.துரைசாமி, பாலம் இருளப்பன், தி.மு.தனியரசு, புழல் நாராயணன், மருது கணேஷ், ஆசைதம்பி, குறிஞ்சி கணேசன், ஏ.வி.ஆறுமுகம், இளையஅருணா, தனரமேஷ் மற்றும் ஏராளமான தி.மு.க.வினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.