செய்திகள் (Tamil News)
கைது

கருங்கல் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

Published On 2020-05-06 14:33 GMT   |   Update On 2020-05-06 14:33 GMT
கருங்கல் அருகே நேராகாட்டுவிளையில் கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்து 400 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.
கருங்கல்:

கருங்கல் அருகே நேராகாட்டுவிளையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சென்று சோதனை செய்தபோது பிரபின் ஆன்டனி என்பவர் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது.

இதையடுத்து பிரபின் ஆன்டனியை போலீசார் கைது செய்து 400 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

Similar News