செய்திகள் (Tamil News)
ஒரே நாளில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.19 ஆயிரம் அபராதம் வசூல்
வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் வேலூரில் முககவசம் அணியாத நபர்கள் மற்றும் கையுறை, முககவசம் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் வேலூரில் முககவசம் அணியாத நபர்கள் மற்றும் கையுறை, முககவசம் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று வேலூர் 2,3,4-வது மண்டல சுகாதார அலுவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முககவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். 2-வது மண்டலத்தில் ரூ.5 ஆயிரமும், 3-வது மண்டலத்தில் ரூ.1,200-ம், 4-வது மண்டலத்தில் ரூ.13 ஆயிரம் அபராதம் என்று மொத்தம் ரூ.19,200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் வேலூரில் முககவசம் அணியாத நபர்கள் மற்றும் கையுறை, முககவசம் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று வேலூர் 2,3,4-வது மண்டல சுகாதார அலுவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முககவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். 2-வது மண்டலத்தில் ரூ.5 ஆயிரமும், 3-வது மண்டலத்தில் ரூ.1,200-ம், 4-வது மண்டலத்தில் ரூ.13 ஆயிரம் அபராதம் என்று மொத்தம் ரூ.19,200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.