செய்திகள் (Tamil News)
விபத்து பலி

உசிலம்பட்டி அருகே விபத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர் பலி

Published On 2020-06-12 08:41 GMT   |   Update On 2020-06-12 08:41 GMT
உசிலம்பட்டி அருகே விபத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி:

உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் உள்ள பெருமாள் கோவில்பட்டியில் இருந்து சேடபட்டியை நோக்கி சென்ற ஷேர் ஆட்டோவும், பேரையூரில் இருந்து உசிலம்பட்டியை நோக்கி வந்த மினி வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ஷேர் ஆட்டோ டிரைவர் கவண்டன்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி(வயது 60) பலத்த காயமடைந்தார். இவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் ஆண்டிச்சாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான ஆட்டோ டிரைவர் ஆண்டிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News