செய்திகள் (Tamil News)
தற்கொலை

ஆரணி அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

Published On 2020-10-03 08:38 GMT   |   Update On 2020-10-03 08:38 GMT
ஆரணி அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணி அருகே சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 30) இவர் சென்னையில் சொந்தமாக கார் வைத்துள்ளார். அவரே டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஜோஷிகா, பிரிதிஷா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு வந்து விட்டார். போதிய வருவாய் இல்லாததால் ஐஸ்வர்யா தனது தாய் வீடான ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்திற்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த மணிவண்ணன் தனது மனைவி ஐஸ்வர்யாவை சந்தித்து வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். அதற்கு இன்னும் சில நாட்கள் போகட்டும் என்றார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மணிவண்ணன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது தந்தை ரங்கநாதன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News