செய்திகள் (Tamil News)
கோப்புபடம்

நாகையில் கஞ்சா விற்ற பெண் கைது

Published On 2020-10-03 13:54 GMT   |   Update On 2020-10-03 13:54 GMT
நாகப்பட்டினம் அருகே கஞ்சா விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பப்ளிக் ஆபீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 53) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News