செய்திகள் (Tamil News)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.92 லட்சம் உண்டியல் காணிக்கை

Published On 2020-12-11 03:00 GMT   |   Update On 2020-12-11 03:00 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.91 லட்சத்து 95 ஆயிரத்து 508-ம், 254 கிராம் தங்கமும், 543 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது.
திருவண்ணாமலை :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 20-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா தொடக்க நாளில் இருந்து நேற்று முன்தினம் மகா தீப தரிசனம் நிறைவு வரை உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து சாமி தாிசனம் செய்தனர். மேலும் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.91 லட்சத்து 95 ஆயிரத்து 508-ம், 254 கிராம் தங்கமும், 543 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது.

Similar News