செய்திகள் (Tamil News)
கொரோனா வைரஸ்

சிதம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-06-01 10:05 GMT   |   Update On 2021-06-01 10:05 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தி.மு.க. கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரி அழிசிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் மேல்புவனகிரி யூனியன் தி.மு.க. கவுன்சிலராக இருந்தார்.

இவருக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் தன்னை பரிசோதித்து கொண்டார். அப்போது ராமமூர்த்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி இறந்தார்.

Similar News