செய்திகள் (Tamil News)
மேட்டுப்பாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர் கைது
மேட்டுப்பாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள தங்கவேல் (வயது55) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 30 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் விஷ வாயுடன் கூடிய 20 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் தங்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள தங்கவேல் (வயது55) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 30 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் விஷ வாயுடன் கூடிய 20 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் தங்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.