செய்திகள் (Tamil News)
கைது

கொள்ளிடம் அருகே கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

Published On 2021-08-20 09:45 GMT   |   Update On 2021-08-20 09:45 GMT
கொள்ளிடம் அருகே கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர், திருமயிலாடி கிராமத்தில் சூதாட்ட கிளப் இயங்கி வருவதாக புகார்கள் வந்தது. நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் புத்தூர் திருமயிலாடியில் செயல்பட்டு வந்த சூதாட்ட கிளப்பில் அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய கடலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), சீர்காழி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அங்கு சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சேர்கள், ஸ்டூல்கள், டேபிள்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்துரு, மண்டகண்டன் மற்றும் பறிமுதல் செய்த பொருட்களை தனிப்படை போலீசார் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய கேசவன், சேலம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், காட்டுமன்னார்குடி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Similar News