செய்திகள் (Tamil News)
கொரோனா வைரஸ்

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

Published On 2021-10-30 10:40 GMT   |   Update On 2021-10-30 10:40 GMT
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது 211 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 274 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 28 ஆயிரத்து 398 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News