புதுச்சேரி

புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்துக்கு தடை

Published On 2024-10-18 04:26 GMT   |   Update On 2024-10-18 04:26 GMT
  • மது பிரியர்களும் பாக்கெட் சாராயத்தை குடித்து வந்ததோடு வாங்கி சென்று குடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
  • பிளாஸ்டிக் பொருட்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்துறை தடை விதித்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் 110 சாராயம், 92 கள்ளுக்கடைகள் உள்ளது.

சாராயக்கடைகளில் பாக்கெட்டில் அடைத்து சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பாக்கெட் சாராயத்தை புதுச்சேரி மட்டுமின்றி எல்லை பகுதிகளில் உள்ள தமிழக சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மது பிரியர்களும் பாக்கெட் சாராயத்தை குடித்து வந்ததோடு வாங்கி சென்று குடிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இதற்கிடையே 2019-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்துறை தடை விதித்தது.

இதனால் பாக்கெட்டில் சாராயம் விற்பது தடை செய்யப்பட்டது. இதையடுத்து புதுச்சேரி, காரைக்கால் சாராயக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் மீண்டும் பாக்கெட்டில் சாராயம் விற்க அனுமதி கோரினர். இதனால் பாக்கெட் சாராயம் விற்க கலால்துறை அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் சமீபத்தில் அறிவில் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை கலால்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் பிளாஸ்டிக் தடையை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதித்து கலால்துறை உத்தர விட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கலால்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News