செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் சூதாடிய 7 பேர் கைது

Published On 2021-11-05 08:50 GMT   |   Update On 2021-11-05 08:50 GMT
உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி அறிவுரையின் பேரில் உடுமலை காவல் உதவி ஆய்வாளர் சம்பத்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலையத்துகுட்பட்ட நேரு நகர் பகுதியில் சட்டவிரோத சீட்டாட்டம் நடைபெற்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி அறிவுரையின் பேரில் உடுமலை காவல் உதவி ஆய்வாளர் சம்பத்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முருகன், வினோத்குமார், முத்துக்குமார் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 ஆயிரத்து 120 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News