செய்திகள்
கைதான கதிரேசன், கருப்புசாமி

உடுமலையில் இளம்பெண்ணுக்கு செல்போனில் தொந்தரவு-2 வாலிபர்கள் கைது

Published On 2021-11-07 08:31 GMT   |   Update On 2021-11-07 08:31 GMT
கதிரேசன் தனது நண்பர் கருப்பன் என்கின்ற கருப்புசாமியுடன் சேர்ந்து இளம்பெண்ணின் அண்ணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
உடுமலை:

உடுமலையை அடுத்த எலையமுத்தூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர் 20 வயது இளம்பெண் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபரத்தை அந்தபெண் தனது அண்ணனிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த இளம்பெண்ணின் அண்ணன் கதிரேசனை தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கதிரேசன் தனது நண்பர் கருப்பன் என்கின்ற கருப்புசாமியுடன் சேர்ந்து இளம்பெண்ணின் அண்ணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடும்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அமராவதி போலீசார் கதிரேசன், கருப்பன் என்கின்ற கருப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்கையை தொந்தரவு செய்தவரை தட்டிக்கேட்க சென்ற அண்ணன் தாக்கப்பட்ட சம்பவம் எலையமுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News