செய்திகள்
தொடர் மழை எதிரொலி - விழுப்புரம், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 11ம் தேதி வரை மிதமான மழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடலுர் மற்றும் விழுப்புரத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.