செய்திகள்
கோப்புபடம்.

அவினாசியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - நாளை நடக்கிறது

Published On 2021-11-09 09:24 GMT   |   Update On 2021-11-09 09:24 GMT
மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன் பெறலாம்.
அவினாசி:

அவினாசியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. 

இதுகுறித்து அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 10-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. 

கூட்டத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். 

எனவே மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News