செய்திகள்
கோப்புபடம்

அவினாசி பகுதியில் மழையால் நிரம்பாத பொதுப்பணித்துறை பராமரிப்பு குளங்கள்

Published On 2021-11-11 04:06 GMT   |   Update On 2021-11-11 04:06 GMT
கருவலூர் குளம், கானூர், முறியாண்டம்பாளையம், கிளாகுளம், சேவூர், சங்கமாங்குளம், தாமரைக்குளம் உட்பட 14 குளங்கள் உள்ளன.
அவிநாசி:

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 கிராம ஊராட்சிகளில் 249 சிறிய, பெரிய குட்டை, குளங்கள் உள்ளன. அந்தந்த கிராம ஊராட்சிகளின் பராமரிப்பில் உள்ள அவற்றில் பெரும்பாலான இடங்களில் உள்ள குளம், குட்டைகள், முந்தைய ஆண்டுகளில் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டன.

அதன் விளைவாக தற்போது பெய்து வரும் மழையில், அதிக கொள்ளளவுடன் நிரம்பி வருகின்றன. மொத்தமுள்ள 249 குளம், குட்டைகளில் 117 குட்டைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன  என  ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி அளவில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் கருவலூர் குளம், கானூர், முறியாண்டம்பாளையம், கிளாகுளம், சேவூர், சங்கமாங்குளம், தாமரைக்குளம் உட்பட 14 குளங்கள் உள்ளன. மழையால் கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பிய அளவிற்கு பொதுப்பணித்துறை குளங்கள் நிரம்பவில்லை.

பொதுப்பணித்துறையினர் கூறுகையில்:

கிராம ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை கடந்துதான் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரும். முந்தைய ஆண்டுகளில் ஒரு மழை பெய்தாலே குளங்கள் நிரம்பிவிடும்.

ஆனால் இம்முறை அதிகளவு மழை பெய்தும், பொதுப்பணித்துறை குளங்கள் மொத்த கொள்ளளவில், 10 முதல் 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே நிரம்பியுள்ளன.

இதற்கு காரணம் பிரதான குளத்துக்கு தண்ணீர் வரும் வழித்தடங்களில் ஆங்காங்கே உள்ள ஊராட்சி நிர்வாகத்தினர், ‘செக்டேம்‘ அமைத்து  வழிந்தோடி வரும் தண்ணீரை தேக்கி வைத்தனர். பல இடங்களில் புதர்மண்டிக் கிடந்த குட்டைகள் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளன. 

இதனால் மழைநீர் அவற்றில் தேங்கி விடுகிறது. அவை நிரம்பி வெளியேறும் உபரிநீர் தான் பொதுப்பணித்துறை குளத்துக்கு வருகிறது. தொடர்ந்து மழை பெய்தால் பொதுப்பணித்துறை குளங்கள் நிரம்பும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News