செய்திகள் (Tamil News)
விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்ட காட்சி.

வெள்ளகோவிலில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2021-11-14 07:30 GMT   |   Update On 2021-11-14 07:30 GMT
வெள்ளகோவில் காவல் நிலையத்தில் காங்கேயம் வட்ட சட்ட பணி குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் காவல் நிலையத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் அக்டோபர் 2-ந் தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது. 

இந்த வெள்ளி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கூடுமிடம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகிய அனைத்து பகுதிகளிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சட்ட விழிப்புணர்வு வாகனமும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் காங்கேயம் வட்ட சட்ட பணி குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், வாசுதேவன், ஷாஜகான் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், ராஜ், ராஜமூர்த்தி மற்றும் தலைமை காவலர்கள், ஆண், பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.  
Tags:    

Similar News