செய்திகள் (Tamil News)
வெள்ளகோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கே.ராசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள உத்தண்டகுமாரவலசு பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 70). சம்பவத்தன்று இரவு கோவை- திருச்சி மெயின் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதியில் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த பைக் மோதியது. இதில் பொன்னுசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி இறந்தார்.
இதுகுறித்து வெள்ளகோவில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கே.ராசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.