செய்திகள் (Tamil News)
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் சிவபெருமான்.

வெள்ளகோவில் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

Published On 2021-11-17 09:56 GMT   |   Update On 2021-11-17 09:56 GMT
பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீரால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவிலில் சோழீஸ்வரர் ஆலயம், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் ஆலயம், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீரால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. 

இதில் பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News