செய்திகள்
கைது

செம்பனார்கோவில் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது

Published On 2021-11-19 13:26 GMT   |   Update On 2021-11-19 13:26 GMT
செம்பனார்கோவில் அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் செம்பனார்கோவில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு வீட்டின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மேமாத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வகுமார் (வயது 29) என்பதும், வீட்டின் அருகே சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News