செய்திகள்
மதுரை அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
மதுரை அருகே கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை அருகிலுள்ள மாத்தூரை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 30) ஜே.சி.பி. டிரைவர். இவர் சிங்கம்புணரிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பியுள்ளார். அப்போது கீழவளவு அருகே கொன்னைபட்டி என்ற இடத்தில் வந்தபோது, வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தி முனையில் ரூ.5 ஆயிரத்தை பறித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கீழவளவு போலீசார் சாலக்கிபட்டியை சேர்ந்த தினகரன்(30) என்பவரை கைது செய்தனர்.