உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2022-01-08 07:34 GMT   |   Update On 2022-01-08 07:34 GMT
அருள்புரம், சேகாம்பாளையம், சேடபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி - சேகாம்பாளையம் கிராமத்தில் மதுக்கடை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் போலீசில் புகார் மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

அருள்புரம், சேகாம்பாளையம், சேடபாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. எண்ணற்ற குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் உள்ளிட்டவை இப்பகுதியில் அமைந்துள்ளன. ஊருக்கு எல்லையில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் இதேபோல் இப்பகுதியில் மதுக்கடை அமைக்க முயற்சி நடந்தது. ஊராட்சியில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின் மதுக்கடை அமைக்கும் பணி கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் மதுக்கடை அமைக்க முயற்சி நடந்து வருவது கவலை அளிக்கிறது. 

இதனால் இளைஞர்கள், தொழிலாளர்கள் பலர் மதுவுக்கு அடிமையாகும் அபாயம் உள்ளது. மேலும் அரசு துவக்க, உயர் நிலைப்பள்ளிகள் இப்பகுதியில் உள்ளதால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News