உள்ளூர் செய்திகள் (District)
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலக்கண்ணனை கைது செய்தனர்.
உடுமலை:
உடுமலை அமராவதி நகரைச் சேர்ந்தவர் கோகுலக்கண்ணன் ( வயது 19). இவர் அங்குள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவர் 14வயது சிறுமியிடம் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் சிறுமி 6 மாத கர்ப்பமானார். பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்ய கோகுலக்கண்ணன் மறுத்துவிட்டார். இது பற்றி உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலக்கண்ணனை கைது செய்தனர்.