உள்ளூர் செய்திகள் (District)
கோப்புபடம்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2022-02-02 09:06 GMT   |   Update On 2022-02-02 09:06 GMT
விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலக்கண்ணனை கைது செய்தனர்.
உடுமலை:

உடுமலை அமராவதி நகரைச் சேர்ந்தவர் கோகுலக்கண்ணன் ( வயது 19). இவர் அங்குள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவர் 14வயது சிறுமியிடம் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதில் சிறுமி 6 மாத கர்ப்பமானார். பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்ய கோகுலக்கண்ணன் மறுத்துவிட்டார். இது பற்றி உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலக்கண்ணனை கைது செய்தனர்.

Similar News