உள்ளூர் செய்திகள் (District)

ஒரே நாளில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை

Published On 2024-10-23 08:34 GMT   |   Update On 2024-10-23 08:34 GMT
  • சிவானந்தா காலனியில் வசிக்கும் மற்றொரு தொழில் அதிபர் வீட்டிலும் இன்று வருமான வரிச்சோதனை நடந்தது.
  • கோவையில் ஒரேநாளில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை:

கோவை சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசிக்கும் தொழில் அதிபர் வீட்டுக்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். அவர்கள் தொழில் அதிபரின் நிறுவனம் தொடர்பாக வரவு-செலவு விவரங்களை கேட்டறிந்து சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசிக்கும் தொழில் அதிபர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சிவானந்தா காலனியில் வசிக்கும் மற்றொரு தொழில் அதிபர் வீட்டிலும் இன்று வருமான வரிச்சோதனை நடந்தது.

கோவையில் ஒரேநாளில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News