உள்ளூர் செய்திகள் (District)
புதுவையில் 2-வது நாளாக பிரபல நகை கடையில் வருமான வரி சோதனை-முக்கிய ஆவணங்கள் சிக்கியது
புதுவையில் 2-வது நாளாக பிரபல நகை கடையில் வருமான வரி சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
புதுச்சேரி:
புதுவை கொசக்கடை வீதியில் உள்ள பிரபல நகைக்கடையான சிவவள்ளி விலாஸ் கடையில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சென்னையிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுவாக பிரிந்து இந்த கடைகளில் நேற்று சோதனை நடத்தினர். இந்த கடைகளின் கடலூர், விழுப்புரத்தில் உள்ள கிளை கடைகளிலும் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். நகைகளின் விற்பனை விவரம், கொள்முதல் ரசீது ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
இந்த சோதனையின் காரணமாக நகை கடை கள் மூடப்பட்டது. இந்நிலையில் இன்றும் 2-வது நாளாக இந்த கடைகளில் சோதனை தொடர்ந்தது. கடையின் 3 ஷட்டர்களை மூடி சோதனை நடத்து கின்றனர். இதனால் இந்த நகை கடைகள், கிளை கடைகள் இன்றும் அடைக்கப்பட்டு இருந்தது. வாடிக்கையாளர்கள் அனு மதிக்கப்படவில்லை. தொடர்ந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.