உள்ளூர் செய்திகள் (District)
19-ந்தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு
தமிழக நகர்ப்புற பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 19-ந்தேதி நடைபெற உள்ளது.
திருப்பூர்:
உள்ளாட்சி தேர்தலையொட்டி 19-ந்தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள் எச்.ஏ.ரகுமான் மற்றும் வீ.புகழேந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழக நகர்ப்புற பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும், ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில்உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும், தங்களதுதொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அவ்வாறு ஊதியத்துடன் விடுப்பு வழங்கதவறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.