உள்ளூர் செய்திகள்
திருட்டு

கோவை அருகே வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம் நகை திருட்டு

Published On 2022-02-16 11:55 GMT   |   Update On 2022-02-16 11:55 GMT
கோவை அருகே வியாபாரி வீட்டில் ரூ.1 லட்சம் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை நியூ சித்தாபுதூரை சேர்ந்தவர் பாபு (வயது 43). வியாபாரி. சம்பவத்தன்று வீட்டு மாடியில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். மேலும் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கி உள்ளனர். சம்பவத்தன்று வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த வைர மோதிரம், தங்க மோதிரம் செல்போன் என ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்களை திருடி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News