உள்ளூர் செய்திகள் (District)
சமூக விரோதிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை
சமூக விரோதிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர்
தென்மண்டல ஐ.ஜி.யாக அஸ்ராகார்க் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொறுப்பு ஏற்றார். இதையடுத்து அவர் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வாக்கி டாக்கி மூலம் போலீசாருக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை கூறும் ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது:
ஒரு பகுதியில் தனிப்பிரிவு போலீசார் கொலை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்பும் பழிக்கு பழி கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தகவல் தெரிவித்த பின்பும் இவ்வாறு பழிக்குப்பழி கொலை சம்பவங்கள் நடந்தால் அந்த பகுதி இன்ஸ் பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தான் பொறுப்பேற்க வேண் டும். சம்பவம் நடந்த சூழலை பொறுத்து தேவைப்பட்டால் துணை போலீஸ் சூப்பிரண் டுக்கும் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீசார் குற்றங்களின் தன்மையை பொருத்து தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழிக்குப்பழி கொலைகள் நடப்பதை தடுக்க வேண்டியது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பாகும்.
தடை செய்யப்பட்ட லாட்டரி, மணல், கஞ்சா விற்பனை செய்வோர் மீது ஒருசில போலீசார் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் மீது முதல் நடவடிக்கையாக பணியிடமாற்றம், 2வது நடவடிக்கையாக சஸ்பெண்டு, 3&வது நடவடிக்கையாக குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்படும்.
காவல்துறையில் 50 சதவீதம் முதல் 60 சதம் போலீசார் உரிய விதிகளை பின்பற்றி பணிகளை செய்து வருகிறார்கள். விதிகளை மீறி செயல்படும் போலீசார் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகள் காக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டிய வர்கள், வேண்டாதவர்கள் என்ற பாரபட்சம்கூடாது. மனு மீது முறையான விசாரணை நடத்தினால்தான் பொது மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படும்.
புகார்மீதான வழக்குகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தாமதம் செய்யக்கூடாது. குற்றவாளிகளுக்கு சாதகம் இல்லாமல் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சைபர்கிரைம் போலீசாருக்கு 1930 என்ற அவசர எண் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டி.ஜி.பி இது பற்றி சில போலீசாரிடம் கேட்டபோது அவர்களுக்கு அதுகுறித்த தகவல் தெரிய வில்லை. எனவே மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்த தகவல்களை போலீசார் அறிய நடவடிக் கை எடுக்கவேண்டும்.
போலீசாருக்கு விடுமுறை வழங்குவதில் பாரபட்சம் கூடாது. சுழற்சி முறை சரியாக இருக்க வேண்டும். அதில் குழுவாக இணைந்து முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். அனைத்து போலீசாருக்கும் விடுமுறை சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏதேனும் குறைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம். பிற மாவட்டங்களில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களையும் வாட்ஸ்அப் மூலம் என்னிடம் தெரிவிக்கலாம். போலீசார் மற்றும் உயர திகாரிகள் விதிமுறைகளை பின்பற்றி நடக்கின்றார்களா? என்பதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்