உள்ளூர் செய்திகள் (District)
சலவை எந்திரம் சரிந்து விழுந்து கிடக்கும் காட்சி.

திருப்பூரில் சலவை எந்திரம் விழுந்து தொழிலாளி உடல் நசுங்கி சாவு

Published On 2022-04-08 11:00 GMT   |   Update On 2022-04-08 11:06 GMT
சலவை எந்திரம் மணி மீது சரிந்து விழுந்தது
திருப்பூர்:  

திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் ஆத்துபாளையம் அம்மன் கோவில் பின்புறத்தில் உள்ள ஒரு சலவை நிலையத்தில் வேலை செய்து வந்தார்.

 நேற்று இரவு வேலை முடிந்து சலவை நிலையத்தில் தூங்கி  கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த   சலவை எந்திரம் மணி மீது  சரிந்து விழுந்தது. இதில் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 

தகவல் கிடைத்ததும் 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News