உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

திருப்பூரில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி அண்ணன்-தம்பி பலி

Published On 2022-04-12 05:08 GMT   |   Update On 2022-04-12 05:08 GMT
திருப்பூர் அருகே விபத்தில் அண்ணன்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன்கள் மணி கண்டன் (வயது 21), ஜெய் சூர்யா (19). இவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

இந்தநிலையில் ஜெய் சூர்யா வெளியூர்சென்று விட்டு திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்திற்கு வந்தார். இதையடுத்து அவரை மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். திருப்பூர் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

பலத்த காயமடைந்த ஜெய்சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணி கண்டன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் அண்ணன்-தம்பி பலியான சம்பவம் திருப்பூர் பொது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News