உள்ளூர் செய்திகள் (District)
கோப்பு படம்

உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்

Published On 2022-05-08 07:47 GMT   |   Update On 2022-05-08 07:47 GMT
உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி:

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காஞ்சிரங்கோடு தொடுகுளம் கல்லறி விளையை சேர்ந்தவர் செல்வின் (வயது 40). இவர் உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் துணைத் தலைவராக உள்ளார்.  சம்பவத்தன்று சிராயன்குழி சந்திப்பில் கொரோனா,  டெங்கு மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த தொடுகுளம் பகுதியை சேர்ந்த அஜின் குமார் என்ற அனில் (33) என்பவர் கூட்டத்தில் புகுந்து தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டதோடு கம்பை காட்டி மிரட்டியும் சென்றுள்ளார். இதுகுறித்து செல்வின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News