உள்ளூர் செய்திகள் (District)
விருதுநகரில் தொழிலாளி-இளம்பெண் மர்மமான முறையில் இறந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள அல்லம் பட்டியைச் சேர்ந்தவர் வேடராஜன் (வயது 31). இவர் வில்லிபத்திரியில் உள்ள எண்ணெய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலையில் இருந்தபோது வேடராஜன் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேடராஜன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாரதி மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேலகோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் செல்வி (30). இவருக்கு சம்பவத்தன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வி கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.