உள்ளூர் செய்திகள் (District)

கடலூர் அருகே டிராக்டர் மோதி 2 பெண்கள் உள்பட 3 பேர் காயம்

Published On 2023-04-14 09:27 GMT   |   Update On 2023-04-14 09:27 GMT
  • இவர்கள் 3 பேரும் கடலூர் திருவந்திபுரம் - பாலூர் சாலையில் பில்லாலி தொட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
  • ட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த டிராக்டர் திடீரென்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

கடலூர்:

நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டை சேர்ந்தவர் இளவழகன் (வயது 25), கொங்கராயனூரை சேர்ந்தவர்கள் நிவேதா (20), நிரோஷா (17). இவர்கள் 3 பேரும் கடலூர் திருவந்திபுரம் - பாலூர் சாலையில் பில்லாலி தொட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த டிராக்டர் திடீரென்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News