உள்ளூர் செய்திகள் (District)

பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுவன் திடீர் தற்கொலை

Published On 2023-05-03 09:37 GMT   |   Update On 2023-05-03 09:37 GMT
  • பெற்றோர் தங்களது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
  • கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் மணிகண்டன். கூலித் தொழிலாளி. இவரது மகன் சபரீஸ்வரன் (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று மணிகண்டனின் பெற்றோர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவன் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்ற பெற்றோர் தங்களது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக அவர்கள் தூக்கு கயிற்றில் இருந்த இறக்கி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மணிகண்டனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News