உள்ளூர் செய்திகள் (District)

குழாய் பைப்லைன் உடைந்து குடிநீர் சாலையில் வழிந்தோடிய காட்சி. 

திருநாவலூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் தண்ணீர்அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

Published On 2023-08-18 08:14 GMT   |   Update On 2023-08-18 08:14 GMT
  • குடிநீர் பைப்லைன் குழாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக உடைந்து குடி தண்ணீர் சாலை ஆறுபோல வழிந்தோடி வருகிறது.
  • அசுத்தமான நீர் மூலம் பொதுமக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் வண்ணமும் உள்ளது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் திருநாவலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 3500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உள்ள குடிநீர் பைப்லைன் குழாய் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக உடைந்து குடிதண்ணீர் சாலை ஆறுபோல வழிந்தோடி வருகிறது. இதனால் இந்த பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு குடிநீரை பயன்படுத்த முடியால் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் ஆறுபோல் வழிந்தோடும் நீரை விவசாய மோட்டார் மூலம் பொதுமக்கள் பலக்கத்திற்கு உபயோப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சாலை முழுவதும் குடிநீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லமுடியாமலும், 3 நாட்கள் குடிநீர் அந்த பகுதியில் சூழ்ந்து உள்ளதால் அசுத்தமான நீர் மூலம் பொதுமக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் வண்ணமும் உள்ளது.

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அந்த பகுதி மக்கள் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று கூறினர். ஆனால் இதுநாள் வரை எந்தவித நடிவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு உரிய அதிகாரிகள் மூலம் இந்த பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து வீணாக சாலையில் செல்லும் குடிநீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Tags:    

Similar News