கோவையில் குடிபோதையில் வாலிபர் மயங்கி விழுந்து சாவு
- அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது50). கூலி தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (55).
இந்நிலையில் அமல்ராஜுக்கு குடி பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று இவர் குன்னத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்க்கு சென்றார். அப்போது அளவிற்க்கு அதிகமாக மது அருந்திவிட்டு அந்த பகுதியில் மயக்கம் அடைந்து திடீரென அவர் நிலைகுலைந்து மயங்கி சுருண்டு விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.