உள்ளூர் செய்திகள்
- பழையார் கடற்கரையில் மீன் வாங்கி அதனை விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
- பால் ஏற்றி வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவ ட்டம் சீர்காழி அடுத்த அரசூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சங்கர் (வயது42).
மீன் வியாபாரி. இவர் இன்று காலை பழையார் கடற்கரையில் மீன் வாங்கி அதனை தனது விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார் .
அப்போது தாண்டவன் குளம் அருகே சென்றபோது பால் ஏற்றி வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.