உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

கம்பத்தில் நகைக்கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு

Published On 2023-10-28 06:57 GMT   |   Update On 2023-10-28 06:57 GMT
  • தனது தாயிடம் கம்பத்தில் தங்கிவிட்டு மறுநாள் வருவதாக கூறிச்சென்ற அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது நகைக்கடை மேலாளர் பேசினார்.
  • அதில் வேலைக்கு வந்துகொண்டிருந்தபோது பத்திரபதிவு அலுவலகம் அருகே திடீரென மயங்கி விழுந்து கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார்.

கம்பம்:

பெரியகுளம் அருகே சருத்துபட்டியை சேர்ந்தவர் வீரமுருகன்(35). இவருக்கும் கம்பத்தை சேர்ந்த ரெஜினா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண்கு ழந்தை உள்ளது. வீரமுருகன் தேனியில் உள்ள நகைக்கடை யில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார்.

கடையின் திறப்பு விழாவையொட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். தனது தாயிடம் கம்பத்தில் தங்கிவிட்டு மறுநாள் வருவதாக கூறியுள்ளார். இந்தநிலையில் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது நகைக்கடை மேலாளர் பேசினார்.

அதில் வீரமுருகன் வேலைக்கு வந்துகொண்டிருந்தபோது பத்திரபதிவு அலுவலகம் அருகே திடீரென மயங்கி விழுந்து கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்க னவே வீரமுருகன் இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து வீரமுருகனின் தாய் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News