உள்ளூர் செய்திகள்
மேற்கூரை போடும் பணியில் ஈடுபடும்போது தவறி கீழே விழுந்த தொழிலாளி பலி
- சம்பவத்தன்று கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தார்.
- ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகமரை ஏமனூர் பகுதியைச் சேர்ந்த கமலேஷ் (வயது 48). கூலிதொழிலாளியான இவர் ஓசூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மேற்கூரை போடும் பணிக்காக சென்றார். அங்கு சம்பவத்தன்று கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கமலேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.