உள்ளூர் செய்திகள் (District)

பாம்பு கடித்து கரும்பு வெட்டும் தொழிலாளி சாவு

Published On 2023-01-09 07:56 GMT   |   Update On 2023-01-09 07:56 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் பகுதியில் தனது உறவினர்களுடன் கடந்த 3 மாதங்களாக கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
  • சம்பவத்தன்று இவர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது கரும்பு சருகுக்குள் இருந்த கட்டுவிரியின் பாம்பு இவரை கடித்துள்ளது.

பரமத்தி வேலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே துறையூர் பகுதியை சேர்ந்தவர் ஆதிசிவம். இவரது மகன் சக்திவேல் ( வயது 22 ), கூலித்தொழிலாளி.

இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் பகுதியில் தனது உறவினர்களுடன் கடந்த 3 மாதங்களாக கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று இவர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தபோது கரும்பு சருகுக்குள் இருந்த கட்டுவிரியின் பாம்பு இவரை கடித்துள்ளது. அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சக்திவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News