உள்ளூர் செய்திகள் (District)
செஞ்சி அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் பஸ் மோதி பலி
- செஞ்சி அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் பஸ் மோதி பலியானார்.
- செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம்:
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி என்ற ஊரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரபு (வயது 30). இவர் செஞ்சி போலீஸ் நிலையம் எதிரே சாலையை கடக்க முயன்றார். அப்போது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று பிரபு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்தசெஞ்சி போலீசார் பிரபுவின உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.