உள்ளூர் செய்திகள் (District)
நாமக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் மகனுடன் விஷம் குடித்த பெண் சாவு
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் குடும்ப பிரச்சினையில் மகனுடன் விஷம் குடித்த பெண் பலியானார்.
- குடும்ப பிரச்சினை காரண மாக தேவராஜை மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மன முடைந்த தேவராஜ் தனது தாயுடன் சேர்ந்து விஷம் குடித்தது தெரிய வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுந்தரம் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண வேணி (வயது 65). இவரது மகன் தேவராஜ் (24). இவர்கள் இருவரும் நேற்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணவேணி உயிரி ழந்தார். தேவராஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குடும்ப பிரச்சினை காரண மாக தேவராஜை மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மன முடைந்த தேவராஜ் தனது தாயுடன் சேர்ந்து விஷம் குடித்தது தெரிய வந்தது. இந்த சம்பவம்
குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.