உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் அருகே அழகு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத பூஜை தொடக்கம்
- அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்படும்
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பூஜை நேற்று தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் தினந்தோறும் அம்மனுக்கு கூழ் படைத்து சிறப்பு பூஜையுடன் வழிபடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் பூஜைகள் நடைபெறும். மேலும் காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.