உள்ளூர் செய்திகள் (District)

பொன்னேரியில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-21 16:46 GMT   |   Update On 2022-12-21 16:46 GMT
  • அதிமுக மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • நகர செயலாளர் செல்வகுமார், நகர துணை தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

பொன்னேரி:

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, நெய் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகர அதிமுக சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார்.

இதில் நகர செயலாளர் செல்வகுமார், நகர துணை தலைவர் விஜயகுமார், முன்னாள் பேரூர் தலைவர் பா. சங்கர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத், ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் செல்வழகி எர்ணாவூரான், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், பொன்னேரி நகராட்சி கவுன்சிலர்கள் மணிமேகலை, சுரேஷ்,, அபிராமி சரண்யா, ஆனந்த், மீஞ்சூர்மாரி, ஆரணி ஓம் சக்தி குணபூபதி, பொன்னேரி யுவராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News