உள்ளூர் செய்திகள்

அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு...!

Published On 2024-01-12 02:58 GMT   |   Update On 2024-01-12 02:58 GMT
  • அமோனியா கொண்டு செல்லும் குழாவில் பாதிப்பு ஏற்பட்டு வாயு வெளியேறியது.
  • பொதுமக்கள் கண் எரிச்கல், வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்டனர்.

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த உரத் தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. அந்த அமோனியா திரவ வாயு தொழிற்சாலையில் உள்ள பெரிய கிடங்கில் சேமிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 26-ந்தேதி இரவு திடீரென இந்த குழாயில் சேதம் ஏற்பட்டு, குழாயில் தேங்கியிருந்த வாயு வெளியேறத் தொடங்கியது. இதனால் வாயு காற்றில் கலந்து பரவத் தொடங்கியது. இதனால் மக்களுக்கு வாந்தி மயக்கம், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதனைத் தொடரந்து தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் அமோனியா கசிவு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரின் தனி செயலாளர் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இழப்பீடு தொகை தொடர்பாக ஒரு சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News