உள்ளூர் செய்திகள் (District)

விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மதுக்கூரில், மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-03-26 10:04 GMT   |   Update On 2023-03-26 10:04 GMT
  • மது ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • சமூக ஆர்வலர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே 10 வது வார்டு மௌலானாதோப்பு பகுதியில் இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் மற்றும் மது ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், தஞ்சாவூர் தொழிலாளர் துறை செயல் அலுவலர், பட்டுக்கோட்டை கலால் பிரிவு தனி வட்டாட்சியர், மதுக்கூர் பேரூராட்சி மன்ற தலைவர் வகிதா பேகம் ஹாஜா மைதீன், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் வீரமணி, மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள், மதுக்கூர் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் நாட்டுப்புற கலைஞர்கள்மூலம் இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் மற்றும் மது ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவுன்சிலர் கோமதி சின்னத்தம்பி செய்திருந்தார்.

Tags:    

Similar News