உள்ளூர் செய்திகள் (District)

எடக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2023-08-13 07:45 GMT   |   Update On 2023-08-13 07:45 GMT
  • எடக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
  • இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அடுத்த எறஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் காசாம்பூ (வயது 75). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரது மகள் சுகந்தியின் பராமறிப்பில் வாழ்ந்து வந்தார். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சுகந்தி டீக்கடை வைத்துள்ளார். டீக்கடையில் இருந்து காசாம்பூ நடந்து சென்றார்.

அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது, இதில் சாலையின் அருகில் விழுந்த காசாம்பூ பலத்த காயங்களுடன் துடிதுடித்து இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த எடக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News