உள்ளூர் செய்திகள் (District)
டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடந்த ரக்சாபந்தன் விழாவில் தஞ்சை ஆதனகோட்டை அரசு பள்ளி மாணவி சந்தியா பங்கேற்றார்.

டெல்லி ரக்சாபந்தன் விழாவில் பங்கேற்ற தஞ்சை மாணவிக்கு பாராட்டு விழா

Published On 2024-08-26 05:19 GMT   |   Update On 2024-08-26 05:19 GMT
  • திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்ற ரக்‌ஷாபந்தன் விழா.
  • தமிழகத்தில் இருந்து 4 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து- ஆனந்தி தம்பதியின் மகள் சந்தியா (வயது 14). இவர் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ரக்சாபந்தன் விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, தமிழகத்தில் இருந்து 4 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கல்வித்திறன் மற்றும் தனித்திறன் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவி சந்தியாவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ரக்சாபந்தன் வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார்.

இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவி சந்தியாவுக்கு தலைமையாசிரியர் தர்மராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

Tags:    

Similar News